Saturday, July 14, 2012

சில செய்திகள்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை.

பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

01:தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

02:பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

03:வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

04:பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

05:சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

06:மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

07:குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

09:அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் 
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

10:தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள். -

2 comments: